அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் 2,500 பக்தர்களுக்கு அனுமதி

by Editor / 06-12-2022 09:45:48am
அண்ணாமலையார் கோவிலில்  மகாதீபம் 2,500 பக்தர்களுக்கு அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த மகா தீபத்தை கண்டு மேன்மை அடைவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது.
மலை ஏறும் பக்தர்களுக்கு அவர்களின் புகைப்படம் மற்றும் பார் கோடு உடன் இந்த பாஸ் வழங்கப்படுகிறது. இது திருவண்ணாமலை – செங்கம் சாலையில் அமைந்துள்ள அரசு கல்லூரியில் வைத்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via