கொலையானதாக கூறப்பட்டசிறுமி காதலனுடன் வாழ்வது கண்டுபிடிப்பு.

by Editor / 07-12-2022 09:06:40am
 கொலையானதாக கூறப்பட்டசிறுமி காதலனுடன் வாழ்வது கண்டுபிடிப்பு.

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கடந்த 2015ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். சில நாட்களுக்குப் பிறகு ஆக்ராவில் 14 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை தன் மகளின் சடலம் என தந்தையார் கூற, காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அந்த கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவரது மகன் விஷ்ணு என்பவரை கைது செய்தனர்.

அவரை குற்றவாளி என கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் விஷ்ணு கொலை செய்ததாக காவல்துறை கூறிய பெண், 2015 ஆம் ஆண்டு காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவி தன் காதலனுடன் ஓடிப்போய், அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் இருப்பதை விஷ்ணுவின் உறவினர்கள் கண்டுபிடித்தனர். தற்போது இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திடி,என்.ஏ.சோதனைக்கு ஆட்படுத்த அனுமதி கோரியுள்ளனர்.

 

Tags :

Share via