குவாரிக்கு தீவைத்த வாலிபர்கள் இருவர் கைது

by Staff / 07-12-2022 04:13:59pm
குவாரிக்கு தீவைத்த வாலிபர்கள் இருவர் கைது

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் குருமூர்த்தி (28), ராமர் மகன் சிவா (20) ஆகிய 2பேரையும் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி வேலையை விட்டு நீக்கிவிட்டார்களாம்.  இதில் ஆத்திரம் அவர்கள் 2பேரும் குவாரியில் இருந்த குடிசை ஷெட்டுக்கு தீவைத்தார்களாம். இதுகுறித்து குவாரி ஒப்பந்ததாரரான சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த நேசமணி மகன் கில்பர்ட் ஜோன்ஸ் (38) என்பவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கில்பட் ஜோன்ஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் வழக்குப் பதிந்து, குருமூர்த்தி மற்றும் சிவா இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

 

Tags :

Share via