இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 8 பேர் கைது
மதுரை ஜெஹிந்த்புரம் பகுதியில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட "குஜராத் கலவரம்" தொடர்பான பிபிசி யின் ஆவணப்படத்தை பார்க்கப் போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்து இருந்ததையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆவணப் படம் ஒளிபரப்புவதற்கு வந்த 8 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags :