தொட்டிலில் தூங்கிய குழந்தை பலி

by Staff / 10-12-2022 04:39:10pm
தொட்டிலில் தூங்கிய குழந்தை பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளியை சேர்ந்தவர் மதிவாணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு கோகுலஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை இருந்தது. பிரசவத்துக்காக ஏற்கனவே முத்துலட்சுமி கோபி பெரிய குறவன்பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமி குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டலிவட படுக்க வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது தொட்டிலில் இருந்த குழந்தை அசைவற்று காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே உறவினர்கள் உதவியுடன் குழந்தையை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து சிறுவலூர் போலீசில் மதிவாணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாரிடம் வழங்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், 'தாய்ப்பால் குடித்த குழந்தை புரையேறி இறந்து உள்ளது, ' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொட்டிலில் படுக்க வைத்திருந்த 3 மாத குழந்தை திடீரென இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via