12 வயது சிறுவன் பலாத்காரம்

by Staff / 15-12-2022 01:55:16pm
12 வயது சிறுவன் பலாத்காரம்

புது டெல்லி மாநிலம் சாரை ரோகிலா பகுதியில் 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வட டெல்லி டிசிபி சாகர் சிங் கால்சி கூறுகையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட எம்.டி இஸ்ரான் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் குற்றவாளி மீது குற்றப்பிரிவு 377 மற்றும் 506 பிரிவில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த இளைஞன் சிறுவனுடன் பலமுறை தகாத முறையில் உறவு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via