பிரதமர் நரேந்திர மோடி கார் வெடிகுண்டு தாக்குதல்- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்தார்
பிரதமர் நரேந்திர மோடிஇரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றிருந்த பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகலில் டெல்லி திரும்பி,.
விமான நிலையத்திலிருந்து நேரடியாக லோக் நாயக் ஜெய பிரகாஷ் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு,நேற்று முன்தினம் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்துஆறுதல் கூறி அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்....முன்னதாக, பூடானில் நடந்த ஒரு நிகழ்வில், டெல்லி குண்டுவெடிப்பு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார்.
Tags :


















