கஞ்சா விற்ற முதியவர் கைது

by Staff / 15-12-2022 04:16:51pm
 கஞ்சா விற்ற முதியவர் கைது

கரூர் அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பசுபதிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா வைத்து விற்பனை செய்ததாக ராஜேந்திரன் (64) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via