உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடமைகளை சோதனையை செய்தனர். உடமைகளில் எதுவும் இல்லை.இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்தனார். அவருடைய உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 180 கிராம் தங்க பசை இருந்தது கண்டுபிடித்தனர். மலேம் அவருடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து 600 கிராம் எடை உடைய இரண்டு பெரிய தங்கச் செயின்களையும் கைப்பற்றினர். அந்தப் பயணியிடம் இருந்து ஒரு கிலோ 780 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 86. 5 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :