பத்தாயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஆப்பிள் நிறுவனம்

by Staff / 21-03-2022 05:40:21pm
பத்தாயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஆப்பிள் நிறுவனம்

மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கசலுகை  திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சென்ற நிதி ஆண்டில் இருந்து இந்தியாவின் 10 முதல் 15 சதவீதம் வரையிலான ஐபோன் தேவையை மட்டுமே பூர்த்தி செய்த ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி சார்ந்த ஊக்கசலுகை  திட்டத்தின் மூலம் சலுகை பெற்ற பின் 75 முதல் 85 சதவீதம் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் விஸ்ட்ரன் க்பாக்ஸ்கான்   மற்றும்பெக்ட்ரான்  ஆகிய ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஐபோன்கள் தயாரிக்கப்படும் நிலையில் எஸ்.இ .20-20 ஐபோன் 11 மற்றும் 12 ஆகிய மாடல்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via