குடும்பத் தகராறு நர்ஸ் தற்கொலை
மயிலம் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 29; இவரது மனைவி வாசுகி, 27; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த வாசுகி நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் பூபாலம் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :