கேஸ் பங்க் காருக்கு எரிவாயு நிரப்பும்போது திடீரென கார் தீபிடித்து எரிந்தது

by Staff / 24-12-2022 03:09:19pm
 கேஸ் பங்க் காருக்கு எரிவாயு நிரப்பும்போது திடீரென கார் தீபிடித்து எரிந்தது

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான கேஸ் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சி உடுமலை ரோட்டை சேர்ந்த டேனியில் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கிய தனது காருக்கு எரிவாயு நிரப்ப வந்துள்ளார். ஊழியர்கள் காருக்கு எரிவாயு நிரப்பும்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பிழம்பு உருவாகியுள்ளது. தீ சிறிது நேரத்தில் கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. பங்கில் இருந்த ஊழியர்கள் அலறி பிடித்து ஓட்டம் பிடித்தனர்.

கார் உரிமையாளர் செய்வதை அறியாத திகைத்து எரிவாயு நிரப்பும் இடத்தில் இருந்து காரை தீயுடன் தள்ளி விட்டதில் கேஸ் பங்க் வளாகத்தில் இருந்த சுவற்றில் மோதி நின்றது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர் சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றி திருமண மண்டபம் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளது தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அமைத்ததால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கப்பட்டது
 

 

Tags :

Share via