ராகுலின் தைரியத்திற்கு துணை நிற்பது நமது கடமை - மெகபூபா முப்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி பங்கேற்கிறார். யாத்திரை காஷ்மீர் சென்றடைந்ததும் அதில் கலந்து கொள்வதாகவும், அதற்கான அழைப்பிதழ் கிடைத்துள்ளதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரை அடையும் போது அதில் பங்கேற்க எனக்கு முறைப்படி அழைப்பு வந்தது. ராகுல் காந்தியின் அசாத்திய துணிச்சலுக்கு வணக்கம். பாசிச சக்திகளுக்கு சவால் விடும் துணிச்சல் உள்ள ஒருவருடன் நிற்பது எனது கடமை என நம்புகிறேன். சிறந்த இந்தியாவுக்கான அவரது பயணத்தில் அவருடன் இணைந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
Tags :