பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

by Staff / 31-12-2022 11:39:13am
பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மோகனூர் மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர் தில்லை குமார், அவரது மனைவி மற்றும் மூதாட்டி பெரியக்காள் (73) உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த 5 பேர் நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via