கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, இலுப்பக்கோரை பகுதியில் திருவையாறு- கும்பகோணம் நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று இரவு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் உயிருக்கு போராடினார். அவரை அய்யம்பேட்டை காவல்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். விபத்தில் உயிரிழந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்து இலுப்பக்கோரை கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :