மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது - முதல்வர் பேச்சு .

by Staff / 06-01-2023 02:47:09pm
மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது - முதல்வர் பேச்சு .

தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் இலக்கியத் திருவிழா இன்று தொடங்கி 8ஆம் தேதி வரை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 6) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழின் ஆட்சி காலம்தான். தமிழ் செம்மொழி மாநாடு திமுக ஆட்சியில்தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது தலைவர் கருணாநிதிதான். மதவாதத்தாலும் சாதிய வாதத்தாலும் மனிதனுள் பிளவு ஏற்படும்போது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக்கும்" என்று பேசினார்.

 

Tags :

Share via