ஐயப்பனை தரிசித்து விட்டு வீடு திரும்பிய புறா

by Staff / 06-01-2023 02:45:15pm
ஐயப்பனை தரிசித்து விட்டு வீடு திரும்பிய புறா

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மேகலஹட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் புறாக்களை வளர்த்து வருகிறார். சமீபத்தில், ஐயப்ப மாலை அணிந்து சபரிமலை தரிசனம் செய்ய சென்றார். அப்போது, தான் வளர்க்கும் பறவையின் நினைவாற்றலை அறிந்து கொள்வதற்காக டிசம்பர் 30ஆம் தேதி ஒரு புறாவை தன்னுடன் அழைத்துச் சென்று கோவிலில் விட்டு வந்துள்ளார். இந்த நிலையில்,  800 கி.மீ பயணம் செய்து அதன் உரிமையாளர் வீட்டிற்கு  அந்த புறா பத்திரமாக வீடு திரும்பியது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Tags :

Share via