லாரியில் சிக்கி வாலிபர் பலி
குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 26. நேற்று காலை, வேளச்சேரியில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தார்.பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதி, எதிர் திசையில் துாக்கி வீசப்பட்டார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் இறந்தார்.போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுனரான குன்றத்துாரைச் சேர்ந்த மாரியப்பன், 34, என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
Tags :