“கோயம்பேட்டில் பூங்கா அமைக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

by Staff / 14-08-2024 03:55:27pm
“கோயம்பேட்டில் பூங்கா அமைக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாமக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதுகுறித்து அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “ஏரியாக இருந்த இடத்தில் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வணிக வளாகம், பெரிய சினிமா தியேட்டர், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை எல்லாம் வேண்டாம். பேருந்து நிலையத்தில் பொது பசுமை பூங்கா அமைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via