மெட்ரோ ரயிலில் விழுந்து ஒருவர் தற்கொலை
ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் ஒருவர் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முசாபேட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒன்பது மணியளவில் மெட்ரோ ரயில் வந்து கொண்டிருந்த போது திடீரென தண்டவாளத்தில் குதித்தார். அந்த நபர் மீது ரயில் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர் டிக்கெட் இல்லாமல் உள்ளே நுழைந்ததாக தெரிகிறது.
Tags :