கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்.

by Editor / 14-01-2023 11:37:54pm
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்.

காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டி வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தப் புறவழிச் சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள், தனியார் பள்ளிகள் என அமைந்துள்ளன. மேலும், புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் , கல்லூயில் பயிலும் ஒரு காதல் ஜோடி நேற்று மாலை 6. 30 மணி அளவில் அந்தப் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை பகுதியில் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, அந்த வழியாக சென்ற நான்கு வாலிபர்கள் காதல் ஜோடியைக் கண்டதும் மது போதையில் காதலனின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி உள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

காதலின் கழுத்தில் கத்தி வைத்ததால் செய்வதறியாது கத்தி கதறி அழுதும் கல் மனம் படைத்த மது போதை நபர்கள் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தன் பேரில் தாலுக்கா காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் இந்த  கூட்டு பாலியல்  வழக்கில் தேடப்பட்டுவந்த இருவர் மீது துப்பாக்கிச்சூடு 
தலைமறைவாக இருந்த ரவுடிகளின் கால்களில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.


 

 

Tags :

Share via