கடன் தொல்லையால் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மனப்பாடு கிராமம் ராஜா தெருவை சேர்ந்தவர் லிட்டிஷ் இவரது மகன் சிலுவை (32). மீனவர். இவர் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார் ஆனால் அந்த கடனை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இந்தநிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி ஏற்படுத்தவே மன உளைச்சல் அடைந்த சிலுவை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :