மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் லாரியின் டயருக்குள் சிக்கி பலி

by Staff / 21-01-2023 05:28:12pm
மோட்டார் சைக்கிளில் சென்ற  நபர்கள் லாரியின் டயருக்குள் சிக்கி பலி

பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு நபர்கள் லாரியின் டயருக்குள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் இருவரும் வந்துகொண்டிருந்த நிலையில், எதிரே நின்ற காரின் கதவை ஒருவர் திறந்தார். இதனால் பைக்கில் வந்தவர்கள் தடுமாறி, அந்த காரின் கதவில் இடித்து கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த லாரி அவர்கள் மீது ஏறி சென்றது. இந்த வீடியோ பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி காலகிருஷ்ண சுவாமி, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via