குழந்தை சித்திரவதை தாய்க்கு வலைவீச்சு.  

by Editor / 21-01-2023 11:14:40pm
குழந்தை சித்திரவதை தாய்க்கு வலைவீச்சு.  

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய ஆஸ்மி. இவர்களது 12 வயது மகள் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தி, வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய வைப்பாராம். சில நேரங்களில் உடலில் சூடு வைத்து தலையில் அடிப்பாராம். சிறுமியின் தலையில் தையல் போட்ட தழும்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து குளச்சல் மகளிர் போலீசார் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு நாகர்கோவிலிலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கீதா சிறுமியை கொடுமைப்படுத்தியதாக தாய் ஆரோக்கிய ஆஸ்மி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது சிறுமியின் தந்தை மரிய ரூபன் ஊர் திரும்பி உள்ளார். பெற்ற மகளை சூடு வைத்து துன்புறுத்திய தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

 

Tags :

Share via