தலித் இளைஞரை மணந்த பெண்:13 குலப் பெரியவர்கள் மீது வழக்கு.

by Editor / 22-01-2023 07:47:15pm
தலித் இளைஞரை மணந்த பெண்:13 குலப் பெரியவர்கள் மீது வழக்கு.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெனுபள்ளி மண்டல்பாடு பகுதியைச் சேர்ந்த பொன்ராம்பாபு என்பவரின் மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரை காதலிந்து திருமணம் செய்துக்கொண்டார். இதனால், கடந்த 12ம் தேதி ஜாதி கட்சி பெரியவர்கள் கூடி ராம்பாபு குடும்பத்தை ஜாதி கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். அதற்குரிய நகல் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளம்பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, 13 குலப் பெரியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

Tags : தலித் இளைஞரை மணந்த பெண்.

Share via