திருமணமான இளம்பெண் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

by Editor / 29-01-2023 10:14:35am
திருமணமான இளம்பெண் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் வினித் இவர் இலஞ்சி பகுதியில் வசித்து வரும் மர அறுவை ஆலை அதிபர் நவீன் படேல் என்பவருடைய மகள் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் இந்த நிலையில் காதலர்களை பிரிக்கும் நோக்கத்தில் நவீன் படேல் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி குத்துக்கல்வலசையில் ஜவுளி எடுக்கச் சென்ற வினித் மற்றும் கிருத்திகா தம்பதியினரின் வினித்தை தாக்கி குருத்திகாவை நவீன் படேல் குடும்பத்தினர் காரில்குண்டுக்கட்டாக காரில் தூக்கி சென்றனர் இது குறித்து வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் அடிப்படையில்  குற்றாலம் போலீசார் பெண்ணின் தந்தை நவீன் படேல், தாய் தர்மிஷாபடேல், விஷால்,கீர்த்தி படேல், ராஜேஷ் படேல்,ராசு, மைதினிக், ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் திருமணம் ஆன இளம் பெண்ணை கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த 5 பேரை தனிப்படையினர்  பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இருந்து  புளியரை காவல்துறைசெய்துனைச் சாவடிப்பகுதியில் வந்த காரைமடக்கி பிடித்து காரில் இருந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட இளம் பெண் குஜராத் மாநிலத்திற்கு விமான மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகின்றது.இந்த நிலையில் எர்ணாகுளம் விமான நிலயத்தில் தென்காசி ஆய்வாளர் பாலமுருகன் தலமையில் ஒரு தனிப்படையினர் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணை கடத்த பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் பெண்ணை கடத்துவதற்கு உதவிய முகேஷ் படேல்,தினேஷ் படேல்,புளியரையை சேர்ந்த நிதிநிறுவனத்தின் உரிமையாளர் மணி என்ற சுப்ரமணி ஆகியோரை இன்று காலை போலீசார் கைது செய்து செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறைநடுவர் மன்ற நீதிபதி சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

 

Tags :

Share via