முதியோர் உதவித்தொகை 1000 நிறுத்தம் - இபிஎஸ் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 முதியோர் உதவித்தொகை வழங்கி வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த முதியோர் உதவித்தொகையை திமுக அரசு நிறுத்தி வருகிறது. இது முதியோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஓமலூரில் இலவச ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்துவைத்த பின் இபிஎஸ் இவ்வாறு பேசினார்
Tags :