தலை சிதைந்து சிறுவன் மரணம்
மகாராஷ்டிர மாநிலம் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள வாஷி நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் அமர் நலவ்டே (9) என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சிறுவன் மீது திடீரென விழுந்தன. தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
Tags :