மதுரையில் விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு
மதுரை ஆயுதப்படை மைதானம் வளாகத்தில் அமைந்துள்ள இதயம் அறக்கட்டளை கீழ் செயல்பட்ட முதியோர் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தை உயிரிழந்ததாக போலியான ஆவணங்கள் கொடுத்து விற்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தல்லாகுளம் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை சிறையில் அடைத்த நிலையில்மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பாற்ற ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்
ஆட்சியரின் உத்தரவின் பேரில் சமூகநலத்துறை குழந்தைகள் நலத்துறை வருவாய் துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு மாவட்டத்திலுள்ள காப்பகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் குழந்தையை யாராவது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ அல்லது தத்து எடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்த தகவல் தெரிந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்
இந்த நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒரு தம்பதி சட்டவிரோதமாக இரண்டு வயது பெண் குழந்தையை விலைக்கு வாங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சமூகநலத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு காப்பகத்தில் பத்திரமாக சேர்த்துள்ளனர்.
Tags :