குளத்தில் மூழ்கி பெயிண்டர் பரிதாப பலி

by Staff / 10-02-2023 04:04:42pm
குளத்தில் மூழ்கி பெயிண்டர் பரிதாப பலி

தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் பெரியநாயகம் (வயது 40). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 2 பேருடன் புதுக்கோட்டை அருகே உள்ள திரவியபுரம் குளத்துக்கு குளிக்க சென்றாராம். அப்போது எதிர்பாராதவிதமாக பெரியநாயகம் குளத்தில் விழுந்து மூழ்கி விட்டாராம். இதனால் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலையில் பெரியநாயகம் உடல் குளத்தில் மிதந்து ஒதுங்கியது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார், இறந்த பெரியநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via