கனிமவள கடத்தலுக்கு எதிராக கடையத்தில் தொடங்கியது போராட்டம்.டிப்பர் லாரிகள் சிறை பிடிப்பு.

by Editor / 17-02-2023 09:26:56am
கனிமவள கடத்தலுக்கு எதிராக கடையத்தில் தொடங்கியது போராட்டம்.டிப்பர் லாரிகள் சிறை பிடிப்பு.

தென்காசி மாவட்டத்தில்  கடையம்,முக்கூடல்,கீழக்கடையம், உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த குவாரிகள் மூலம் 10 சக்கரம் முதல் முதல் 24 சக்கரங்கள் கொண்ட டிப்பர் லாரிகள் பாறைகளையம்,எம்.சாண்ட்,ஜல்லி உள்ளிட்டவைகளை, ஏற்றி கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.

மேலும் இவ்வகையான லாரிகள்  ஆலங்குளம்  முதல் கடையம் வரை உள்ள பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த லாரிகள் அதிக எடை உள்ள கனிம வளங்களை எடுத்து வருவதால் தென்காசி மாவட்டத்தின் முக்கிய சாலைகளான அம்பை சாலைகள்,கடையநல்லூர்,புளியங்குடி,இலத்தூர்,மற்றும் கீழ கடையம் ரயில்வே சாலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மிகப் பெரிய பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் இப்பொழுதில் உள்ள கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மிகப் பெரிய பாதிப்பு அடைந்துவருகிறது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம்  கடையம் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கடையம் வட்டாரத்திலுள்ள குவாரிகளையம்,கிரஷர்களையும்  தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றியும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்தும், உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தினால் நேற்று கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் என்பவர் தலைமையில் ஏராளமான பொதுமக்களுடன் சேர்ந்து ஜே.சி.பி.இயந்திரத்தை கொண்டு கீழ கடையம் ரயில்வே சாலையில் ஐந்து அடி தூரம் பள்ளம் தோண்டி  கனிம வளங்களை கொண்டு வரும் டிப்பர் லாரிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாதவாறு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.இந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் கடையம் பகுதியில் கனிமவளங்களை  ஏற்றிவந்த  டிப்பர் லாரிகளை பொதுமக்களோடு சேர்ந்து கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமையில்  பிடித்து வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு  அதிக பாரம் ஏற்றி வரும் இந்த வாகனத்தால் சாலைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக குற்றசாட்டுஎழுப்பிவருகின்றனர்.

 

Tags :

Share via