சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டுநர் கைது
நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தைச் சேர்ந்த பகவதியப்பன் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதி உள்ள எட்டு வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பகவதியப்பனை கைது செய்தனர்.
Tags :