நாம் தமிழர் கட்சி நிர்வாகி மண்டை உடைப்பு

by Staff / 18-02-2023 11:46:02am
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மண்டை உடைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, ஈரோடு ராஜாஜிபுரத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்பு தென்னரசுவின் மண்டை உடைக்கப்பட்டு பலத்த காயமமைந்தார். உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் திரண்டு, அடித்த திமுகவினரை கைது செய்ய கோரி 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 

Tags :

Share via