மூன்று பெண்கள் கொடூரமாக படுகொலை

by Staff / 22-02-2023 02:28:34pm
மூன்று பெண்கள் கொடூரமாக படுகொலை

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாலி பாலு மாலி (25), சங்கீதா மகாதேவ் மாலி (50), பராபாய் பாபாஜி மாலி (45) மூன்று பெண்கள், நேற்று மாலை 5 மணியளவில் அவர்களின் வீட்டுக்கு முன்னால் அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்டனர். சப்-டிவிஷன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மூன்று பெண்களைக் கொன்ற சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via