திண்டிவனத்தில் சொந்த நண்பன் வீட்டில் திருடிய கல்லூரி மாணவன் கைது நகைகள் பறிமுதல்

by Editor / 27-02-2023 10:17:00am
திண்டிவனத்தில் சொந்த நண்பன் வீட்டில் திருடிய கல்லூரி மாணவன் கைது நகைகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன் இவர் வீட்டில் கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்த  நகைகள் திருடு போனது இதையடுத்து இவர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக அய்யனாரப்பனின்  மகன் ஐயப்பன் உடன்படிக்கும் அதே கல்லூரியை சேர்ந்த கௌதம் கடந்த பல நாட்களாக ஐயனாரப்பன் மகன் உடன் வீட்டிற்கு வந்து போனதும் அவர் வந்த பிறகுதான் நகைகள்  திருட்டுப் போய் உள்ளதாகவும் கௌதம் மீது சந்தேகம் உள்ளதாக ஐயனாரப்பன் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் திண்டிவனம் அரசு கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவன்  கெளதமை போலீசார் காவல் நிலையம் வந்து அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் அவரது நண்பன் அய்யனார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் கௌதம் யிடம் இருந்து 26 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மீது கிளியனூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. படிப்பதற்காக  தன் சொந்த நண்பன் வீட்டுக்கு வந்து நகைகளை திருடிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via