நிபா வைரஸால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

by Staff / 14-09-2023 11:26:35am
நிபா வைரஸால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

நிபா வைரஸ் பாதிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் (அங்கன்வாடிகள், மதரஸாக்கள் உட்பட) வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும். கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்யலாம். பல்கலைக்கழக தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த பத்து நாட்களுக்கு திட்டமிடப்பட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் கீதா உத்தரவிட்டுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via