ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 74.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 74.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றதை அடுத்து வாக்கு பெட்டிகள் பாதுகாப்புடன் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் .ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, இத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.. இத்தொகுதியில் காங்கிரஸ அதிமுக ,நாம் தமிழா் கட்சி என 77 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது..
Tags :