தென்காசியில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்த்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் வன்னியப் பெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பட்டத்தை சிஐடியு தென்காசி மாவட்ட செயலாளர் வேல்முருகன் துவக்கி வைத்து பேசினார்.
மத்திய மோடி அரசே! பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்திடு , மோட்டார் தொழிலில் ஈடுபடும் அனைத்து வாகன தொழிலாளர்களை சீரழிக்காதே, இன்சூரன்ஸ், எப்சி-க்கு கால அவகாசம் வேண்டும், லைசென்ஸ் எடுப்பதை தனியார் மயப்படுத்தாதே, புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்திடு, அனைத்து ஓட்டுனர்களுக்கும் கொரோனா கால நிவாரண என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சாலை போக்குவரத்துசங்க தென்காசி கிளைதலைவர் சுப்பிரமணியன். என். பால்ராஜ், தமு ச தலைவர் மாரியப்பன் சிஐடியு வட்டார தலைவர். லெனின்குமார் , கட்டுமான சங்க மாவட்ட செயலாளர். கிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆட்டோ சங்க மாவட் தலைவர் ராஜசேகரன்
ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
Tags :