ரயில்வே பெண் கேட் கீப்பர் தாக்கப்பட்ட வழக்கு:கேரள வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

by Editor / 10-03-2023 11:02:53pm
ரயில்வே பெண் கேட் கீப்பர் தாக்கப்பட்ட வழக்கு:கேரள வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.

 தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பராக கேரளமாநிலத்தை சேர்ந்த பெண் பணிபுரிந்து வந்தார். அவர் வழக்கம் போல் கடந்த பிப்ரவரி16 ஆம் தேதி  இரவு நெல்லையிலிருந்து-செங்கோட்டை நோக்கி சென்றபயணிகளை ரயிலுக்கு  ரயில்வே கேட்டை மூடி திறக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு தனது அறையில் 8.30 மணியளவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் திடீரென பெண் ஊழியர் இருந்த அறைக்குள் புகுந்து அவரிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார். உடனடியாக பெண் ஊழியர் கத்தி கூச்சலிடவே அருகில் இருந்த மற்ற பொதுமக்கள் வருவதற்குள் மர்ம நபர் அங்கு இருந்த தொலைபேசி ரிசிவரால் பெண்ணை தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்ட அந்த ரயில்வே கேட் பெண்  ஊழியரை உடனடியாக பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவர் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் தென்காசி ரயில்வே போலீசார்  சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். உடனடியாக தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன்,உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.பணியில் இருந்த ரயில்வே பெண் ஊழியரிடம்  பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தானா அல்லது ரயில்வே கேட்டின் அருகே மேம்பால பணி நடைபெற்று  வரும் சூழ்நிலையில் அங்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்கி பணிபுரிந்து வருவதால் அவர்களில் யாரேனும் ஒருவராக இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை இருப்புப் பாதை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி தலைமையிலான குழுவினர் தேடி வந்தனர் இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் கேரளமாநிலம் கொல்லம் அருகிலுள்ள பத்தினாபுரம் பகுதியை சேர்ந்த முரளி மகன் அனீஸ் என்பது தெரியவரவே அவரை கடந்த 20 ஆம் தேதிவ்ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணைமேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட அனீஸ் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே இருப்பதாகவும் கொல்லம் மாவட்டம் குன்னி கோடு காவல் நிலைய எல்லைப் பகுதியில் ஒரு கற்பழிப்பு வழக்கு உள்ளது இந்த நிலையில் திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர்  செந்தில் குமார் பரிந்துரையின் பேரில் குற்றவாளி அனீஸை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via