அதிமுக பொதுக்குழு ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை
ஜூலை 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு முரணானது, கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Tags : The petition filed by AIADMK General Committee OPS will be heard today