தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முதல்வர் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. தொழில்துறை சார்பில் டைசன் நிறுவனமானது பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலமைச்சர் முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று பரிமாற்றம் செய்யஉள்ளது. பின் ஒரகடம் மருத்துவ சாதன உற்பத்தி பூங்கா, சிறுசேரி தகவல் தொழிநுட்ப பூங்காவில் உள்ள ஏற்றுமதி வணிக வசதி மையம், பெருந்துறை ஆண்கள் தங்கும் விடுதி, இருங்காட்டுக்கோட்டை தொழில் பூங்காவில் உள்ள தீயணைப்பு நிலையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கட்டுமான விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியையும் முதல்வர் வழங்குகிறார்.
Tags : 5 MoUs signed in the presence of the Chief Minister of Industrial Development in Tamil Nadu