அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு 

by Editor / 12-03-2023 09:56:36am
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு 

மதுரை விமான நிலையத்தில் ஓடுதள பாதையில் விமான நிலைய பேருந்தில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்து  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளிநாடு வாழ் நலப்பிரிவு மாவட்ட செயலாளர்)  பேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி உடன் இருந்த அவரது உதவியாளர், ராஜேஸ்வரனின் செல்போனை பிடுங்கினார். அதிமுகவினரால் மதுரை விமான நிலைய வளாகத்தில் தாக்கப்பட்டார். இதுகுறித்து ராஜேஸ்வரன் அவனியாபுரம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.அதேபோன்று சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஸ்வரன்  மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்யபபட்டுள்ளது.

 

Tags : எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு .

Share via