அதிமுக அமைச்சரின் ஊழல் வழக்கு : இன்று விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக பதிவு செய்த முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை செய்கிறது. அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். அப்போது, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் செய்ததாக ஒ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :