தப்பிவிட்டாரா குமரி பாதிரியார் ..?

by Editor / 16-03-2023 09:04:46am
தப்பிவிட்டாரா குமரி பாதிரியார் ..?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாத்திமாநகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ. அழகியமண்டபம் பகுதியில் பாதிரியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் ஒரு கும்பல் இவரை தாக்கி அவரது லேப்டாப்பை பறித்து சென்றது. பெனடிக் போலீசில் புகார் செய்யவில்லை. அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஆஸ்டின் ஜினோ என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் பெனடிக் பெண்ணுடன் இருக்கும் ஆபாச படங்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட ஆஸ்டின்ஜினோவின் தாயார் மினி அஜிதா, போலீசில் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது: பாதிரியாருடன் இருக்கும் பெண் எனது மகனின் தோழி. பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சரால் தற்கொலை முடிவில் இருப்பதாக அந்தப்பெண் கூறியுள்ளார். இதை கேட்க சென்ற போது பாதிரியார் பதவியை ராஜினமா செய்வதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் செய்ய மாட்டேன் என்றும் கூறினார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. ஆனால் அவரது பெற்றோர் புகாரில் எனது மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார்.

இவரிடம்  ஏ. டி. எஸ். பி. ஈஸ்வரன் விசாரணை நடத்தினார். பெங்களூருவில் நர்சிங் படிக்கும் குமரி மாவட்ட மாணவி ஒருவர் மார்ச் 11ல் எஸ். பி. அலுவலகத்தில் இதே பாதிரியார் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் பாதிரியார் தனக்கு ஆசி வழங்கும் போது தவறான முறையில் தொட்டு பேசியதாகவும், அலைபேசி எண்ணை பெற்று தொந்தரவு செய்வதாகவும், மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.

பெனடிக் தலைமறைவாகி விட்டார். அவர் மீதான நடவடிக்கை குறித்து சர்ச் நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தால் மட்டுமே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த விவகாரத்தை மூடி மறைக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. பாதிரியார் தப்பி செல்லவில்லை எனவும் சம்மந்தப்பட்ட டயோசிஸ் நிர்வாகம் அவரை பெங்களூருக்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via