திருவாசி அருகே லாரியும், ஓம்னி வேனும் மோதி விபத்து - 6 பேர் பலி - 

by Editor / 19-03-2023 07:18:36am
திருவாசி அருகே லாரியும், ஓம்னி வேனும் மோதி விபத்து - 6 பேர் பலி - 

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்த திருவாசி அருகே திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  மரகட்டைகள் ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரியும், எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணம் நோக்கி சென்ற ஓம்னி காரும்  திருவாசி அருகே நேருக்கு நேர்  மோதி  விபத்து.ஒன்பது பேர் ஓம்னி காரில் பயணம் செய்துள்ளனர்.ஒரு குழந்தை, பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்..மேலும் காரிலிருந்து மூன்று பேர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆய்வு ஏற்றுக்கொண்டார்.இந்தவிபத்து அதிகாலையில் நடந்ததால் மூன்று கிலோ மீட்டருக்கு மேலாக போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் காயம்பட்டவர்கள் விவரம் விபரம் வருமாறு:

1, முத்துசாமி வயது 58, குமாரபாளையம், நாமக்கல்.

2. ஆனந்தாயி வயது 57, எடப்பாடி, சேலம்.

3. தவனா ஸ்ரீ  வயது 9, எடப்பாடி சேலம்.

4. திருமூர்த்தி வயது 43 உப்புகுளம், நாமக்கல்.

5. அப்பு என்கிற முருகேசன் வயது 55, உப்புக்குளம் நாமக்கல்.

6. சந்தோஷ் குமார் வயது 31, எடப்பாடி. சேலம். ஓம்னி வேன் ஓட்டுநர்


விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விவரம்

1. தனபால் வயது 36, குமாரபாளையம் நாமக்கல்.

2. திருமுருகன் வயது 29, எடப்பாடி, சேலம்.

3. சகுந்தலா வயது 28, எடப்பாடி, சேலம்.

ஓம்னி வேனில் வந்தவர்கள் அனைவரும் கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர்.அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி சேர்ந்தவர் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் செந்தில்குமாரை வாத்தலை போலீசார் கைது செய்து உள்ளனர்.

 

Tags :

Share via