இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து 8 பேர் படுகாயம்

by Staff / 19-03-2023 12:41:51pm
 இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து 8 பேர் படுகாயம்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பயங்கர சாலை விபத்து நடந்தது. யமுனா விரைவு சாலையில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கார் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரிலிருந்தவர்கள் வெளியே தூக்கி வீசப்பட்டனர். 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஜீவார் டோல் பிளாசாவில் இருந்து பரி சௌக்கிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

 

Tags :

Share via