கார் மோதி அரசு ஊழியர் பலி

by Staff / 02-04-2023 01:23:26pm
கார் மோதி அரசு ஊழியர் பலி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் கிரீன் லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 58). இவர், சேலம் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னால் கோவையில் இருந்து வந்த கார், கோவிந்தசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 

Tags :

Share via