கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு இரு மாநில எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் கூட்டாக வாகன தணிக்கை.

by Editor / 24-12-2023 01:33:48pm
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு இரு மாநில எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் கூட்டாக வாகன தணிக்கை.

கிறிஸ்மஸ் பண்டிகை நாளை நாடெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது இதன் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன இதன் தொடர்ச்சியாக  தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களும் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் தீவிரமான வாகன தணிக்கைக்கு இரு மாநில போலீசார் தலைமையில் உட்படுத்தப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வாகனம் கேரளாவில் தமிழ் வாழும் அனைத்து வாகனங்களும் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு அனுப்பப்பட்டு வருகின்றன மேலும் தமிழகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் கேரள மாநிலத்தைச் சார்ந்த மதுவிலக்கு காவல்துறையினரும் தென்காசி செங்கோட்டை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு இரு மாநில எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் கூட்டாக வாகன தணிக்கை.

Share via