படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் மாயம்

by Staff / 20-04-2024 11:51:12am
படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் மாயம்

ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் மகாநதி ஆற்றில் இன்று படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காணாமல் போயுள்ளனர். சத்தீஸ்கரின் கர்சியா பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் பர்கர் மாவட்டத்தில் உள்ள பதர்செனி குடாவில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு படகில் திரும்பி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மகாநதியில் பலத்த அலைகள் வீசுவதால் மீட்டுப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via