ஆளுநருக்கு கனிமொழி எம்.பி., கண்டனம்
மக்களை தூண்டி விட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதற்கு திமுக எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆளுநர் பேசியதற்கு ஆதாரம் தர வேண்டும் எனவும், மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். சமீபகாலமாக ஆளுநர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் மீண்டும் அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Tags :